Thursday, 16th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ராசிபுரம்: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆலோசனைப்படி பல்வேறு பகுதிகளில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற வருகிறது.
அதன்படி நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றியம் நாவல் பட்டி ஊராட்சி நா.காட்டூர் பூத் எண் 205ல் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு ஒன்றிய கழக செயலாளர் ஈ.கே.பொன்னுசாமி, தலைமை வகித்தார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். ஒன்றிய கழக இணைச் செயலாளர் அமுதா, வரவேற்புரை ஆற்றினார். அண்ணா தொழிற்சங்க செயலாளர் பி.ஜெகநாதன் மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.